RCB Vs UPW Super Over Victory: பெண்கள் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் ஓவர் அதிரடி.! உபி வாரியர்ஸ் வெற்றி.!
சின்னசாமி மைதானத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பெங்களூர் - உபி வாரியர்ஸ் அணி ஆட்டத்தில், சூப்பர் ஓவர் நடைபெற்றது. இறுதியில் உபி வாரியர்ஸ் அணி வெற்றி அடைந்தது.
பிப்ரவரி 24, பெங்களூர் (Bangalore News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - உபி வாரியர்ஸ் அணி மோதிக்கொண்டது. ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் உபி வாரியர்ஸ் அணியும் வெற்றிக்காக போராடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இன்று யாருமே எதிர்பார்க்காமல் சூப்பர் ஓவர் வந்தது. RCB Vs UPW Highlights: நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் சூப்பர் ஓவர்.. அதிரடி ஹைலைட்ஸ்.. மகளிர் பிரீமியர் லீக் கொண்டாட்டம்.!
சூப்பர் ஓவரில் உபி வாரியர்ஸ் வெற்றி:
சூப்பர் ஓவரில் உபி வாரியர்ஸ் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள் 1 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்து இருந்தனர். மறுமுனையில் களமிறங்கிய பெங்களூர் அணியின் வீரர்களில் ஸ்மிருதி மந்தனா அவுட் ரிவியூ சென்று, 3 பந்துகளில் 8 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டு இருந்தார். இறுதியில் பெங்களூர் அணி இலக்கை அடிக்க இயலாமல் தோல்வி அடைந்தனர். இதனால் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. சோபி பேட்டிங் , பீல்டிங்கில் கலக்கி இருந்தார்.
டாடா டபிள்யுபிஎல் வரலாற்றில், சூப்பர் ஓவர் 3 வது சீசனில் 9 வது ஆட்டத்தில் வந்துள்ளது. இது பெண்கள் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்படுகிறது.
உபி வாரியர்ஸ் அணி இரண்டாவது தொடர் வெற்றி: