வானிலை: நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி.. இங்கெல்லாம் கனமழை அலர்ட்.. கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்திலும், புதுவையிலும் இன்று லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஒருசில இடங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tomorrow Weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 01, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப்பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ தென்தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடங்களில்‌ மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ திருநெல்வேலி ஊத்து பகுதியில் 18 செமீ மழையும், நாலுமுக்கு பகுதியில் 16 செமீ மழையும், காக்காச்சி பகுதியில் 15 செமீ மழையும், மாஞ்சோலை பகுதியில் 13 செமீ மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது. இவை தவிர்த்து கன்னியாகுமரி, மணியாச்சி, பாபநாசம், தங்கச்சிமடம், சேர்வலாறு அணை, இராமேஸ்வரம், பாம்பன், நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், சேரன்மாதேவி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணை, இராமநதி, தென்காசி ஆகிய இடங்களில் பரவலான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஈரோட்டில் பகலில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும், இரவு நேரங்களில் குறைந்தபட்சமாக 15 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 01-01-2025 இன்று தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. கன்னியாகுமரி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும்‌ கொடைக்கானல்‌ (திண்டுக்கல்‌ மாவட்டம்‌) பகுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

02-01-2025 நாளை தமிழகத்தில்‌ ஒரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 03-01-2025 முதல்‌ 06-01-2025 வரையில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 07-01-2025 அன்று கடலோர தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, உள்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. Gold Silver Price: புத்தாண்டில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகாலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகாலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

01-01-2025 முதல்‌ 04-01-2025 வரையில் தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வங்கக்கடல்‌ பகுதிகள்‌:

01-01-2025 அன்று இலங்கை கடலோரப்‌ பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

02-01-2025 அன்று தென்மேற்கு வங்கக்கடலின்‌ தெற்கு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 இிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

01-01-2025 அன்று குமரிக்கடல்‌ பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

02-01-2025 அன்று மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

03-01-2025 மற்றும்‌ 04-01-2025 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடலின்‌ தெற்கு பகுதிகள்‌, மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 48 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement