Chennai Girl Suicide: ஆன்லைன் மோசடியில் ரூ.45 ஆயிரம் இழந்த 20 வயது சென்னை இளம்பெண் தற்கொலை; நைஜீரிய கும்பல் அட்டூழியம்.. உங்களுக்கும் அழைப்பு வருதா?.. உஷார்.!
சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நபரை நம்பி ரூ.45 ஆயிரம் அனுப்பி இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சைபர் கிராம் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஜூலை 07, ஓட்டேரி (Chennai News): சுங்கத்துறையில் வெளிநாட்டில் இருந்து வரும் பார்சலுக்கு அரசு பணம் கேட்பது இல்லை. அவ்வாறான அழைப்புகளை பெற்றால் சம்பந்தப்பட்ட நபரின் அழைப்பை துண்டித்தல் நல்லது.
தகுந்த செல்போன் நம்பரை காவல்துறையினரின் சைபர் கிரைம் பிரிவுக்கு தெரியப்படுத்தினால், அவர்கள் மேற்படி விஷயத்தை கவனித்துக்கொள்வார்கள். மாறாக பரிசு அனுப்பியுள்ளேன், பணம் அனுப்பியுள்ளேன் என்று யாரேனும் தொடர்பு கொண்டால் அவர்களை விட்டு விலகி இருத்தலே நல்லது.
சென்னையில் உள்ள ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளம்பெண் அஸ்வினி (வயது 20). இவர் கல்லூரி படிப்பை நிறைவு செய்து, பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
பியூட்டீஷியனுக்கு தேவையான அழகுசாதன பொருட்களை சமூக வலைதளத்தில் தேடி வாங்கியும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவருக்கு சமூக வலைதளத்தில் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. Thread App: இன்ஸ்டாகிராமை போல, ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய திரெட்ஸ் ஆப்.. 10 மில்லியன் பயனர்களை கடந்து பதிவிறக்கம்; விபரம் இதோ.!
அவர் தன்னை இலண்டனில் வேலை பார்த்து வரும் நபர் என்று கூறி அறிமுகம் செய்து நட்பாக பேசி வந்துள்ளார். பின், அஸ்வினியை தனக்கு பிடித்திருப்பதாக கூறியவர், தமிழகம் வந்ததும் திருமணம் செய்யலாம் என காதல் வலைவீசி இருக்கிறார்.
ஒருசமயத்தில் தமது குடும்ப சூழலுக்கு இலண்டன் மாப்பிள்ளை சரிப்படமாட்டார் என எண்ணிய அஸ்வினி, அவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதற்கிடையில், சமீபத்தில் அஸ்வினியை வாட்ஸப்பில் அழைத்த இலண்டன் நபர், உனக்கு பரிசாக 15 ஆயிரம் அமெரிக்க டாலர் அனுப்பி வைத்து இருக்கிறேன்.
இந்த பார்சல் சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கிறது. பணம் செலுத்தியதும் பார்சல் வீட்டிற்கு வரும். நான் சொல்லும் வங்கிக்கணக்குக்கு பணத்தை செலுத்து என கூறியுள்ளார். பணம் செலுத்தாத பட்சத்தில் பெறுநர் முகவரியில் இருக்கும் விபரத்தை வைத்து அதிகாரிகள் உன்னை கைது செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சில நிமிடத்திலேயே மற்றொரு புதிய செல்போன் நம்பரில் இருந்து அஸ்வினிக்கு சுங்கத்துறை அதிகாரி என அழைப்பு வந்துள்ளது. மேலும், பணத்தை உடனடியாக செலுத்தாத பட்சத்தில் கைது நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இதனால் பயந்துபோன அஸ்வினி இரண்டு தவணையாக ரூ.45 ஆயிரம் பணத்தை அனுப்பி இருக்கிறார். மேற்படி ரூ.45 ஆயிரம் கேட்டு அதிகாரி தொந்தரவு செய்ய்யவே, என்ன செய்வது என்று தெரியாமல் விரக்தியடைந்த அஸ்வினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 30 Above Age Girls: 30 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.
மேலும், அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில், "எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. ஐ மிஸ் யு அம்மா" என குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையில், டெல்ஹயில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ள நைஜீரிய கும்பலின் கைவரிசை என்பது உறுதியானது.
இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில், நைஜீரியாவில் இருந்து டெல்லிக்கு மேற்படிப்பு என வந்துள்ள நபர்கள், கும்பலாக சேர்ந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கின்றனர்.
இவர்கள் பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் மூலமாக தகுந்த நபர்களின் குடும்ப பின்னணியை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பரிசு அனுப்பியதாக மோசடி செய்து வருகிறார்கள்.
இவர்களின் கைவரிசையை பெரும்பாலும் இளம்பெண்கள், விவாகரத்தான பெண்கள், இளைஞர்களை குறிவைத்தே நடக்கும். ஆகையால், இதுபோன்ற மோசடி அழைப்பை பெற்றால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறுகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)