வானிலை: அக்.23 வரை அடுத்த அலர்ட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்.. முழு விபரம் உள்ளே.!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில், இரண்டு நாள் இடைவெளிவிட்டு மீண்டும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை, நீலகிரி, சிவகங்கை, திருப்பத்தூர், கோவை, கான்சிபிரும்ம, பெரம்பலூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 34.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக ஈரோட்டில் 16.5 டிகிரி பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், மத்தியமேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ இன்று (17-10-2024) அதிகாலை 04:30 மணி அளவில்‌ வட தமிழகம்‌- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில்‌, புதுச்சேரிக்கும்‌ - நெல்லூருக்கும்‌ இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது. வடதமிழக பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

17.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. Gold Silver Price: தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு; இன்றைய விலை நிலவரம் இதோ.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

18.10.2024 அன்று தமிழகத்‌இல்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அக்.20 & 21ம் தேதி மழை:

20.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருச்‌சிராப்பள்ளி, திண்டுக்கல்‌, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களின்‌ மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.21 அன்று 14 மாவட்டங்களில் மழை:

21.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருச்‌சிராப்பள்ளி, திண்டுக்கல்‌, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களின்‌ மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Chennai Rains: ரூட்டை மாற்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்?.. தப்பித்தது சென்னை.. ஆந்திரா நிலை என்ன?.. ஏழுமலையானே காப்பாத்துப்பா..! 

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Today):

சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

17.10.2024 அன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 17.10.2024 அன்று கர்நாடக கடலோரப்பகுதிகள்‌, மத்‌தியகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. 18.10.2024 அன்று கர்நாடக - கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்‌தவு பகுதிகளில்‌ சூறாவளிக்‌ காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement