விடுமுறை: 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் இதோ.!
நேற்று முதல் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, இன்று மொத்தமாக 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 6 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 , சென்னை (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விடிய-விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான இடஙக்ளில் குளம்போல நீரும் தேங்கியது. மாவட்ட அளவில் இருக்கும் பிரதான ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வானிலை: இன்று கொட்டிதீர்க்கபோகும் பேய்மழை; மக்களே கவனமாக இருங்க.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!
பள்ளிகளுக்கு விடுமுறை (School Holiday):
தேனி, கரூர், அரியலூர், திருவாரூர், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மற்றும் விடுமுறை வழங்கி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Holiday):
அதேபோல, கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)