Civil Services Exam Training: குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணிகளுக்கான பொதுத்தேர்வு பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
அக்டோபர் 08, சென்னை (Chennai News): மத்திய அரசுப்பணிகளுக்கு, மத்திய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. தற்போது அதுதொடர்பான ஆர்வமுடைய நபர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் 2025-ம் ஆண்டுக்கு மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு ஆர்வலர்களை சேர்க்கவேண்டி "நான்முதல்வன்" திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் 08.10.2024 அன்று காலை 11.00 மணிக்கும், தற்காலிக தெரிவுப்பட்டியல் 08.10.2024 அன்று மாலை 5.00 மணிக்கும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. சென்னை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முழு நேரப் பயிற்சிக்கு 225 நபர்கள், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள், மதுரை மற்றும் கோயம்புத்தூர் முழு நேர பயிற்சிக்கு தலா 100 நபர்கள் வீதம் 2000 நபர்கள் ஆக மொத்தம் 525 ஆர்வலர்கள் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி தெரிவு செய்யப்படவுள்ளனர். Scam Calls Alert: போலியான மோசடி அழைப்புகளை நம்பாதீங்க; நடிகர் யோகிபாபுவுடன் சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ.!
பயிற்சி மைய சேர்க்கை:
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும், 14.10.2024 முதல் 17.10.2024 வரையிலான நான்கு நாட்களில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், 17:10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய நாட்களில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அதில் கலந்து கொள்ளவுள்ள ஆர்வலர்கள் அனைத்து மூலசான்றிதழ்கள் கையொப்பமிட்ட 3 நகல்களுடன், பிறப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், அனைத்து கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் பதிவிறக்கம் செய்த அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய சேர்க்கைசீட்டு ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புடன் விடுதி சேர்க்கையும் நடைபெறும். முதல்நிலைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 21.10.2024 முதல் தொடங்கப்பட உள்ளன. ஏற்கனவே இப்பயிற்சி மையங்களில் முழு நேரபயிற்சி பெற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், விவரங்களுக்கு 0௦44 - 2465621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 93457 66957 என்ற வாட்ஸ் -அப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)