வானிலை: வெளுத்து வாங்கும் கனமழை.. 8 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'.. வானிலை மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 11, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று (11-03-2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் நிலவும் தற்போதைய வளிமண்டல நிலை காரணமாக, 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை கணிசமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை (Heavy Rain) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை: 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கனமழை எச்சரிக்கை:
மேலும், தமிழகத்தில் விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை (Today Weather & Tomorrow Weather) நாளை (12-03-2025) வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்படுகிறது. வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகள், நீர் தேங்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)