Family Murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. கொடூர சம்பவம்..!
திருப்பூரில் விவசாய தம்பதி, மகன் என 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 29, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதியான தெய்வசிகாமணி-அமலாத்தாள் வசித்து வந்தனர். இவர்களது மகன் செந்தில்குமார் கோயம்புத்தூரில் வசிக்கிறார். விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று (நவம்பர் 28) இரவு பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், இவர்கள் 3 பேரும் இன்று (நவம்பர் 29) காலை அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை (Murder) செய்யப்பட்டனர். Cyclone Fengal: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்..!
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக, அவிநாசிபாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் நகை, பணத்துக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)