Arnav Evicted: 'டேய் ஜால்ராஸ்' வாய்ப்பை தவறவிட்ட கடுப்பில் ஆண்கள் அணி மீது பாய்ந்த அர்னவ்; கண்டித்து அனுப்பிய விஜய் சேதுபதி.. விபரம் உள்ளே.!
போட்டியாளரின் மனநிலையை சமநிலைப்படுத்தும்பொருட்டு அவர்களுக்கு போட்டியில் இருந்து இடையில் வெளியேறினால், சக போட்டியாளருடன் பேச வாய்ப்பு கொடுக்கப்படும் நிலையில், அர்னவ் அதனை தனது தனிப்பட்ட கொந்தளிப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
அக்டோபர் 21, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), கடந்த அக்.06 முதல் தொடங்கி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 18 போட்டியாளர்கள், 106 நாட்கள் பிக் பாஸ் இல்லத்திற்குள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கும் போட்டிகளை விளையாடி மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெரும் வகையில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ், தமிழுக்கு விஜய் டிவி (Vijay TV) நிர்வாகம் வாயிலாக கொண்டு வரப்பட்டது.
முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றம்:
கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 வது (நடப்பு) சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளில் உள்ளே வந்தார். முதல் வாரத்தின் முதல் எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். Bigg Boss Tamil Season 8: ஜாக்லினை அதிரடியாக கண்டித்த விஜய் சேதுபதி.. மக்கள் கொடுத்த ஆவேச குரல்.. வெளியேறினார் அர்னவ்?
அர்னவும் வெளியேறினார்:
அதனைத்தொடர்ந்து, இரண்டாவது வார எலிமினேஷன் 13 வது நாளான நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்படி அர்னவ் மக்களின் குறைந்த வாக்குகள் பெற்ற நபராக வெளியேற்றப்பட்டார். தான் வெளியேற்றப்பட்டதும் கடுப்பில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற அர்னவ், தனது வெற்றிக்கோப்பையை பளாரென உடைத்து வெளியேறினார். மேலும், அன்ஷிதாவும் (Anshitha) தனது நண்பர் வெளியேறியதால் கடும் சோகத்திற்கு உள்ளாகி இருந்தார். இதனிடையே, வீட்டில் இருந்து வெளியேறிய அர்னவ் (Bigg Boss Tamil Arnav Evicted), போட்டியாளர்களிடம் உரையாடினார்.
வன்மத்தை கக்கிய அர்னவ்:
பெண்கள் அணி, ஆண்கள் அணி என அனைவரையும் பாராட்டி பேசியிருந்தவர், ஆண்கள் அணி தன்னை கடந்த இரண்டு வாரமாக ஒதுக்கியது, நேற்றைய நிகழ்ச்சியில் அர்னவுக்கு அடுத்தடுத்து 5 பட்டங்களை கொடுத்தது என கடுப்பில் இருந்தார். இதனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டவர், ஆண்கள் அணியை ஜால்ரா என வருணித்தார். சுதாரித்துக்கொண்ட விஜய் சேதுபதி, மேற்படி வார்த்தைகளை பேசவிடாமல் தடுத்து அவரை அமைதிப்படுத்தி பேசி அனுப்பி வைத்தார். ஆனால், அவர் பேசுவதை கேட்கும் மனநிலையில் அர்னவும் இல்லை. சாகப்போட்டியாளர்களின் மீது வன்மத்தை கக்கிச் சென்றார்.
முகத்திரையை கிழித்த அர்னவ்:
தன்னை பற்றி தானும், மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த அர்னவ், சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரின் மீதான முந்தைய கால பிரச்சனை காரணமாக தனது போலியான ஆட்டத்தையே அவர் மேற்கொண்டு இருந்தார். ரவீந்தரும் அதனை சுட்டிக்காட்டி, நீ அதனை மாற்றினால் தான் விளையாட இயலும் என கூறியும் பலன் இல்லை. இதனால் இந்த வாரம் அவர் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். தனக்கு கிடைப்பதை கூட பேசியே கெடுத்துவிடுவதுபோல அர்னவ் நேற்று செயல்பட்டது ஒருபக்கம் கண்டனத்தை பெற்றாலும், அவரின் ஆதரவாளர்கள் இடையே போட்டியாளர்களின் முத்திரையை கிழித்ததாக வருணிக்கப்படுகிறது.
அர்னவ் போட்டியாளர்களிடம் பேசிய காட்சிகள்:
கடுப்பில் வெற்றிக்கோப்பையை சுக்குநூறாக்கிய அர்னவ்:
அர்னவ் போட்டியை விட்டு வெளியேறியதும், அவர் பேசிய சில காட்சிகள் நீக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் குற்றசாட்டு.. அவரின் எதிர்காலம் கருதி அவை நீக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)