Student Dies By Suicide: பள்ளி மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன..?
தெலுங்கானாவில் 7-ஆம் வகுப்பு மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 27, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம் (Wanaparthy) மதனபுரம் மண்டலத்தில் உள்ள கொன்னூர் கிராமத்தை சேர்ந்த பிரவீன் குருகுல பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் வாழ்வாதாரத்திற்காக ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய (நவம்பர் 26) தினம் பள்ளியில் கபடி விளையாடிக் கொண்டிருந்த பிரவீன் காயமடைந்தார். உடனே, பள்ளி நிர்வாகம் இன்று காலை அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி..!
இதனையடுத்து, பள்ளிக்கு வந்த பிரவீன் ஆசிரியரை சந்தித்து தான் விடுதி அறையில் ஓய்வெடுப்பதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில், மாணவனின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, பிரவீன் மின்விசிறியில் போர்வையால் தூக்கில் (Hanging Suicide) தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மீட்டு வனபர்த்தி பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)