IT Employee Dies By Suicide: 'மனைவியின் தொல்லை தாங்கமுடியவில்லை' - வீடியோ பதிவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை..!
உத்தர பிரதேசத்தில் மனைவி துன்புறுத்தியதாக கூறி ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 28, ஆக்ரா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவைச் (Agra) சேர்ந்தவர் மனவ் சர்மா. இவர், தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மனவ் சர்மா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை (Suicide) செய்து கொள்வதற்கு முன்பு, அவர் அழுது கொண்டே கழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், தனது மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருப்பதாகவும், சட்டங்கள் ஆண்களைப் பாதுகாக்கவில்லை என்றால் குற்றம் சாட்டப்படுவதற்கு எந்த ஆணும் இருக்க மாட்டான் என்றும், தான் இறந்த பிறகு தனது பெற்றோரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். Fire Accident: 42வது தளத்தில் திடீர் தீ விபத்து; அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
மனைவி மீது புகார்:
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து, மனவ் சர்மாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனின் மரணத்திற்கு தனது மருமகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இருப்பினும், சர்மாவின் மனைவி, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என்னுடைய கணவர் அதிகமாக குடிப்பார், பல முறை தற்கொலைக்கு முயன்றார். நான் அவரை 3 முறை காப்பாற்றினேன். குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்வார்.
காவல்துறையினர் விசாரணை:
இதனைப் பற்றி நான் அவரது பெற்றோரிடம் கூறினேன். ஆனால், அவர்கள் என்னை புறக்கணித்தனர். மேலும், திருமணத்திற்கு முன்பு அந்த உறவு இருந்தது. ஆனால், நான் அவரை மணந்த பிறகு எதுவும் இல்லை என்று கூறினார். இதனிடையே, மனவ் சர்மாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)