
பிப்ரவரி 28, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பைகுலா (Byculla) கிழக்குப் பகுதியில் 57 தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அங்கே உள்ள மிக உயரமான கட்டிடத்தின் 42வது தளத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து (Fire Accident in Building) ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். Student Dies Of Heart Attack: 14 வயது சிறுவன் மாரடைப்பால் பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!
தீ விபத்து:
இதுவரை அதில் யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை. தீ விபத்து நேரிட்டதும், கட்டிடத்தின் பற்ற பகுதிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து, மற்ற தளங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
Fire at @Byculla #mumbai #salsette27 building #Mumbai #fire@abpmajhatv @aajtak @mumbaitak @MumbaiPolice @mybmc @zee24taasnews @MumbaiLocal_ @lokmat pic.twitter.com/9yEAMp5UCq
— Sameer Joshi (@ijoshisameer) February 28, 2025