Dana Cyclone: 100 கிமீ வேகம்.. தீவிர புயலாக வலுப்பெறுகிறது டானா; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

ஒடிசா - மேற்குவங்கம் மாநிலத்தை சேர்த்து டானா புயல் வரும் அக்.24 அன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dana Cyclone (Photo Credit: mausam.imd.gov.in X)

அக்டோபர் 21, புதுடெல்லி (New Delhi): வங்கக்கடல் பகுதியில், அந்தமான் தீவுகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வரும் அக்.24 அன்று மேற்குவங்கம் - ஒடிசா மாநிலங்கள் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அம்மாநிலங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. L Murugan: அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரம்; எல்.முருகன் பரபரப்பு பேட்டி.. திருமாவளவன் மீது குற்றச்சாட்டு.! 

அதிதீவிர புயலாக மாறுகிறது?

இந்நிலையில், டானா (Tana Cyclone) புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, 100 - 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒடிசா - மேற்குவங்கம் கடற்கரையை நோக்கி டானா புயல் நகர்வதால், தமிழ்நாட்டுக்கு இதனால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் மட்டுமே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மழை நீடிக்கும்.

டானா புயல் நகர்வுகளை Windy.com ல் தெரிந்துகொள்ளுங்கள்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement