Delhi Crime: மனைவி, 6 வயது குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்த கணவர்; 13 வயது மகன் உயிர் ஊசல்.!

நள்ளிரவு நேரம் வரை வேலைக்கு வராத நண்பர் தொடர்பு கொண்டு கூறிய செய்தி கேட்டு பதறிபோனவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 3 பேரின் சடலத்தை மீட்டனர்.

Crime File Picture (Photo Credit: Pixabay)

மே 16, புதுடெல்லி (Crime News): புதுடெல்லியில் உள்ள ஷாஹத்ரா ஜோதி காலனி பகுதியை சேர்ந்தவர் சுஷில் (வயது 45). இவரின் மனைவி அனுராதா (வயது 43). சுஷில் டெல்லி மெட்ரோ இரயில் நிர்வாகத்தில் (Delhi Metro Rail Corporation (DMRC), கிழக்கு வினோத் நகர் இரயில் நிலையத்தில் பராமரிப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதிகளுக்கு 13 வயதுடைய மகன் மற்றும் 6 வயதுடைய மகள் இருக்கின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நேர பணிக்கு சுஷில் செல்லவில்லை. அவரின் பணியிட நண்பருக்கு நள்ளிரவு 12:04 மணிக்கு தொடர்பு கொண்டு, தான் எனது குழந்தை, மனைவியை கொலை செய்துவிட்டேன், நானும் தற்கொலை செய்கிறேன் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் பதறிப்போன நண்பர், உடனடியாக காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி இருக்கிறார். அவர்கள் சுஷிலின் அலைபேசி எண்ணை சோதித்து அவரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்துள்ளனர். அங்கு வீட்டின் கதவை உடைத்து பார்த்தவர்களுக்கு பதற்றமான காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. Smartphone Future: ஸ்மார்ட்போன் உலகில் கேள்விக்குறியாகும் இளம் தலைமுறையின் மனஅழுத்தம், எதிர்காலம்.. அதிர்ச்சியை தந்த ஆய்வு ரிப்போர்ட்.!

சுஷில் தூக்கில் சடலமாக தொங்க, படுக்கை அறையில் அவரின் மனைவி அனுராதா மற்றும் 6 வயது மகள் பிணமாக இருந்துள்ளனர். 13 வயது மகன் கத்திக்குத்து காயத்தால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அவரை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சுஷில் எதற்காக தனது குழந்தை மற்றும் மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement