Baby Died: மூட நம்பிக்கையின் உச்சம்; குழந்தைக்கு உடல்நலக்குறைவு சரியாக சூடு வைத்ததால், ஒன்றரை மாத பிஞ்சு பரிதாப பலி.!
குழந்தையின் உடல்நலம் சரியாக சூடு வைத்து, இறுதியில் பச்சிளம் பிஞ்சு மரணித்துள்ள சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 30, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷஹ்டோல் மாவட்டம், பந்த்வா கிராமத்தில் வசித்து வரும் தம்பதிக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி கைக்குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மூட நம்பிக்கையால் சோகம்: இதனையடுத்து, சிறுவனுக்கு உடல்நலம் சரியாக, அவரை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவில்லை. மாறாக, குடும்பத்தினரின் மூட நம்பிக்கைப்படி, சூடான இரும்பு கம்பி கொண்டு சூடு வைத்ததாக தெரியவருகிறது. Indonesia Earthquake Today: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளை தாண்டி பதிவு.!
கடுமையாக மோசமடைந்து உடல்நலம்: இதனால் குழந்தையின் உடல்நலம் மோசமாகவே, அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடிய குழந்தை, இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
காவல்துறையினர் விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)