Ujjain Railway Station: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த இருவர்; சக்கரத்தில் சிக்கி நடந்த சோகம்.. விரைந்து செயல்பட்ட காவலர்கள்.!

நேரமின்மை காரணமாக நாம் பல காரணங்களை கூறி உயிரை துச்சமென மதித்து அலட்சியத்தால் ஒரு விஷயத்தை அடைந்துவிடலாம் என நாம் தவறாக வைக்கும் ஒரேயொரு அடி நமது உயிரை பறிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Ujjain Railway Station Accident Visuals (Photo Credit: RPFIndia)

ஏப்ரல் 05 , உஜ்ஜைன் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் (Ujjain Railway Station) இரயில் நிலையத்தில், தனது பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. அப்போது, தாமதமாக வந்த 2 பேர், இரயிலின் சில இறுதி பெட்டிகளில் முன்பு இருந்து ஏற முயற்சித்துள்ளனர்.

அப்போது, ஒருவர் கால் இடறி கீழே விழுந்துவிட, அவர் இரயிலின் ஓட்டத்தால் சக்கரங்களுக்கும் - தண்டவாளத்திற்கும் - நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

மற்றொருவர் இரயிலுடன் சில அடி தூரம் பயணித்து தனது உயிரை காப்பாற்றிக்கொண்டார். நடைமேடையில் இடையே பயணி சிக்கி விழுவதை கண்ட இரயில் பாதுகாவலரும் ஓட்டுனருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தியை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.!

இரயில் மெதுவாக நகர்ந்து சென்றதால் அதனை ஓட்டுனரும் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, காயத்துடன் மீட்கப்பட்ட பயணி துரிதமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்த விடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரயில்வே காவல் துறையினர், துரிதமாக செயல்பட்ட காவலர்கள் மகன் சிங்க், குல்தீப் ஆகியோரை பாராட்டியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now