Hyderabad Horror: ஆணுறுப்பை துண்டித்து மருத்துவ மாணவர் மரணம்; மனநல பாதிப்பால் நடந்த பயங்கரம்.. ஹைதராபாத்தில் அதிர்ச்சி.!!
மருத்துவக்கல்லூரி மாணவர் தனது ஆணுறுப்பை தானே அறுத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூலை 10, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad), செகந்திராபாத், ஜெகத்திரிகுட்டா பகுதியில் வசித்து வரும் மருத்துவக்கல்லூரி மாணவர் தீக்ஷித் ரெட்டி. இவர் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தீக்ஷித் (Dikshit Reddy) ரெட்டி மன அழுத்தத்தில் இருந்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டார். அதாவது, தனது ஆணுறுப்பை அறுத்து தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துள்ளார். Himachal Pradesh Rains: வெள்ளத்தில் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட பேருந்து; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்.. அதிர்ச்சி காட்சிகள்.!
இதனால் அவரின் உடலில் இரத்தம் முழுவதும் வெளியேறி துர்நாற்றம் வீச, அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது அதிர்ச்சி காட்சிகள் காத்திருந்துள்ளது.
தீக்ஷித் தனது ஆணுறுப்பை அறுத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ள நிலையில், அவரின் உடலை காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)