Three People Dies of Electrocution: சாலையில் அறுந்து கிடந்த மின்சார ஒயர்.. பைக் மீது உரசி 3 பேர் உடல் கருகி பலி..!
ராஜஸ்தானில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் ஒயரில் பைக் உரசியதால், மின்சாரம் தாக்கி 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 24, ஜெய்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், முண்டியாட்-கட்லு (Mundiyad-Kadlu Road) சாலையில் கின்சார் எனும் பகுதியில், பிதராம் தேவசி, கல்லுரம் தேவசி மற்றும் ஜெதராம் தேவசி ஆகிய 3 பேரும், நேற்று (மார்ச் 23) கட்லு கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து கிடந்துள்ளது. Heart Attack: வீட்டு வாசலில் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்; அரசியல்கட்சி பிரமுகரின் உயிர் நொடியில் பிரிந்த சோகம்.!
3 பேர் உடல் கருகி பலி:
இதனை கவனிக்காமல் சென்ற அவர்கள் பைக்கில் உரசியதும், மின்சாரம் பாய்ந்தது. இதனால், உடனே பைக்கில் தீப்பற்றி எரிந்தது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பைக்குடன் எரிந்து உடல் கருகி பலியாகினர். இதனை நேரில் பார்த்தவர்கள், மின்சாரத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால், 3 பேர் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)
