Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மிதுன ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
2025 ஆண்டு மார்ச் 29 அன்று நடைபெற உள்ளது சனி பெயர்ச்சி (Sani peyarchi). பொதுவாக சனிப் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் மிதுன ராசி பலன்கள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
பிப்ரவரி 06, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் இருக்க மிதுன ராசியில் மிருகஷீ ரிஷம் 3 மற்றும் 4 ம் பாதம் திருவாதிரை , புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.
மிதுனம் சனி பெயர்ச்சி பலன்கள் (Mithunam Sani Peyarchi Palan 2025):
மிதுன ராசியில் மிருகஷீ ரிஷம் 3 மற்றும் 4 ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
இது வரை இருந்த தடை, தாமதம் , சோதனை விலகும். மனதில் உற்சாகம் உருவாக்கி புதிய சாதனை படைப்பார்கள். நிறுத்தி வைக்கப்பத்திருந்த பல விஷயங்கள் தானாக நடப்பதைப் பார்ப்பார்கள். அது மட்டுமில்லை, திடீர் வரவு , பயணம் , பணம் என திக்குமுக்காட வைப்பார் சனி. இதெல்லாம் நமக்கு சாத்தியம் இல்லை ஆமாம் சாத்தியமில்லையேஎன யாரிடமும் சொல்லாமலே மனதுக்கு வருத்தத்துடன் புதைத்து வைத்திருந்த பல நல்ல விஷயங்கள் மீது அக்கறை தானாக உருவாகி அவை செயல்பாட்டுக்கு வருவதை மிதுன ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பார்க்க இருக்கும் சனி பெயர்ச்சி அமைப்பு. மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பல விஷயங்கள் தீர்வு காணப்படும். பிள்ளைகளால் ஆதாயம் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் என்று பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். பொதுவாக இவர்களுக்கு நல்ல காலம் என்று சனி பூரட்டாதி நட்சத்திர சாரத்தில் இருக்கும் காலத்தை சொன்னாலும் பண விஷயத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், கடன் பத்திரங்கள், கடன் அப்ளிகேஷன்கள் இவற்றில் கையெழுத்து போடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
முற்றிலும் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது. சனி பகவான் உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது மிதுன ராசி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு பல நன்மைகள் நடக்கும். புதிய சொத்து வாங்க. புதிய வாகனம் வாங்குதல் போன்ற பாக்கியங்கள் கைகூடும். அதே சமயம் நல்ல விஷயத்திற்காக குடும்பத்தை பிரிந்து வாழும் நிலைமை உருவாகலாம் ! அதாவது பதவி உயர்வு காரணமாக ட்ரான்ஸ்ஃபர் அல்லது மேல் கல்வி படிப்பதற்காக வெளியூர் பயணம் அங்கே தங்குதல் போன்றவை உருவாகும் இவை நல்ல முன்னேற்றத்தின் காரணமாக குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டிய சூழல். மிதுன ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி இந்த பெயர்ச்சி காலத்தில் ரேவதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! இதுவரை சனி பெயர்ச்சியால் ஏற்பட்ட நன்மைகளை தக்க வைத்துக்கொள்ள மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பாராத திருப்பங்களால் நஷ்டம் அடையும் தன்மையும் காணப்படுகிறது. ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நன்மை போலவே பல தீய விஷயங்கள் மிக அருகிலேயே வந்து உங்களை தொந்தரவு செய்யக்கூடும். நல்லது இது கெட்டது என்று தீர்க்கமாக ஆராய்ந்து முடிவு செய்யும் உங்களது ஆழ்ந்த அறிவு இந்த சமயத்தில் வேலை செய்யாமல் & அறிவு உங்களுக்கு உதவாமல் பாதுகாப்பு இல்லாத தன்மை உருவாகும். ஆகவே கவனமாக இருக்கவும்.
மிதுன ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
உங்களை பலகாலம் இழுத்தடுத்திக் கொண்டிருந்த ஒரு வழக்கு இப்போது உங்கள் பக்கம் தீர்ப்பாகும். உங்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு கொண்டு இருந்த நீதி ஓரளவு உங்கள் பக்கம் கிடைத்துவிடும். ஆனால் இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். மனநிம்மதியை பணம் கொடுத்து பெற வேண்டிய சூழலை சனி இந்த பெயர்ச்சி காலத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது உருவாக்குவார். மனதில் ஒரு பெரிய குறையுடனே நீங்கள் உங்கள் நிம்மதியையும் அனுபவிக்க வேண்டிய ஒரு சூழல் இருக்கும் இரட்டை மன நிலைமையில் உங்களை வைத்திருக்கும். சனி உத்திரட்டாதி சாரத்தில் மாறும்போது நீங்கள் சண்டை கோழி போல் மாறிவிடுவீர்கள். எதற்கு எடுத்தாலும் சண்டை எதைத் தொட்டாலும் வம்பு எதை நினைத்தாலும் அது சிக்கலாகும் என்ற நினைப்பு உங்கள் மனதில் மேலோங்கி நிற்கும் காலம் சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலம்.
ஒரு வருட காலம் இந்த சண்டை போடும் மனநிலை உங்கள் மனதில் மேலோங்கி இருக்கும் சண்டை போட்டால் வெற்றி உங்கள் பக்கமா என்று கூட உங்களுக்கு தெரியாமல் யாருடன் சண்டை போடுவது எதற்காக சண்டை போடுவது என்ற பாகுபாடு இல்லாமல், உங்களை விட அனுபவத்தில், வயதில், பதவியில் பெரியவர்களுடன் கூட சண்டை போட்டு விடுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் பிறரை சண்டைக்கு தூண்டும் அமைப்பை கொண்டிருப்பார்கள் அதாவது பெண்ணாக இருந்தால் தனது கணவரை சண்டைக்கு தூண்டுவது ஆணாக இருந்தால் தனது மனைவியை சண்டைக்கு தூண்டுவது என்று முன்யோகனை இல்லாமல் நடந்து கொள்வார்கள். இப்படி இருந்தாலும் புதிய சொத்து வாங்குதல் சொத்துக்களை விரிவாக்கம் செய்தல் நல்ல காரியங்களில் ஈடுபடுதல், மங்களகரமான விஷயங்களை செய்து கொடுத்தல் போன்ற நல்ல காரியங்களிலும் சனி பகவான் திருவாதிரை நட்சத்திர அன்பர்களை ஈடுபடுத்துவார் அதற்குரிய வெற்றியையும் கொடுப்பார். ஆனால் இப்படி நல்ல காரியங்கள் செய்யும்போதும் மனஸ்தாபத்துடன் சண்டை சச்சரவும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு சூழலை சனி உருவாக்கிக் கொண்டே இருப்பார்.
வார்த்தைகளின் எண்ணங்களின் செயல்களில் பிறருடன் நாம் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களில் திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு, முதுகுத்தண்டு வடம் போன்றவற்றின் மீது மிகுந்த அக்கறை திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு எலும்பு முறிவு போன்ற விபத்துக்கள் ஏற்பட்டிருந்தால் அதன் பாதிப்புகள் இந்த காலகட்டத்தில் மிக அதிகமாக காணப்படும் ஆகவே மருத்துவ சிகிச்சை தவறாமல் தாமதம் செய்யாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தடைகளை உருவாக்கினாலும், மேற்கல்வி கல்வி முயற்சி புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் சனி சாதகமாக நடந்து வளர்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பார் என்று நிச்சயம் சொல்லலாம். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் அல்லது புதிய மருத்துவ சிகிச்சை அதாவது சர்ஜரி போன்ற மிக முக்கியமான சிகிச்சை தேவைப்படுகின்றவர்கள் இந்த காலகட்டத்தில் அதிகமான பாதிப்புகளை சந்திக்க வேண்டிய அமைப்பாக சனி பெயர்ச்சி காணப்படுகிறது ஆகவே ஒன்றுக்கு பலமுறை ஆலோசித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும். திருமணம் தொடர்பான முடிவு எடுப்பவர்கள், கவனக் குறைவினால் தவறான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு உண்டு ஆகவே வரன் பார்த்தல், பெண் பார்த்தல் விவாகரத்து வழக்குகள் இவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
மிதுன ராசியில் புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
சனி பகவான் இந்த காலகட்டத்தில் முதல் பகுதியின் அதாவது பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது உங்களுக்கு பெருமளவில் நன்மைகள் கிடைக்கும், இந்த நன்மைகள் கைக்கு வருவதற்கு தாமதமாகும் ஆனால் நன்மையான சூழல் அதிகம் உருவாகும். வேலை பார்க்கும் இடத்தில் புதிய வாய்ப்புகள் சனி உருவாக்கி தருவார் ஆனால் அவை உடனே கை கூடும் என்று சொல்ல முடியாது நிறைய முயற்சிகளை எடுத்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய போட்டிகளையும் சனி உருவாக்கித் தருவார். சனி ரேவதி நட்சத்திர சாரம் அடைவதற்குள் கிடைத்திருக்கும் அனைத்து நன்மைகளையும் தக்க வைத்துக் கொள்ளும்படி ஏனைய கிரக அமைப்புகள் கை கூட வேண்டும் அல்லது தசா புக்தி அதற்கு சமமான அளவில் பலன் தர வேண்டும் இல்லையென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது என்ற அளவில் வாய்ப்புகள் தட்டிப் போகும் .ஆனால் நிறைய வாய்ப்புகளும் நிறைய பலன்களும் உருவாகிக் கொண்டே இருக்கும். வெளிநாட்டு பயணம் வாய்ப்புகள் அதன் மூலம் பெரிய அளவில் லாபம் அனுகூலம் பதவி உயர்வு அவசியம் உருவாகும்
வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமல்ல சொத்து வாங்குதல் பணம் சேமித்தல் புதிய முதலீடுகள் செய்தல் என்று பல வாய்ப்புகளை சனி கதவுகளை திறந்து வைத்து அழைப்பார். ஆனால் அவற்றை ஓரளவு தடைகளும் சேர்த்தே வழங்குவார் அதனால் கவனமாக முயற்சி செய்து மிதுன ராசி புனர்பூச நட்சத்திர அன்பர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில. திடீர் தகவல்கள் வந்து மனதை குழப்பம் அவசியம் இல்லாத செலவுகளை உருவாக்கும் ஆனால் உயிர் பாதிப்பு உடல் மோசமாவது என்று ஆகாது . விரயம் அதிகமாக நிகழும் அதாவது பயத்தில் சிகிச்சை செய்து பின்னர் ஒன்றுமே இல்லை பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும் ஆனால் சிகிச்சையும் செலவுகளும் தவிர்க்க இயலாத அளவில் கட்டுப்படுத்த இயலாத அளவில் நிகழும். மிதுன ராசி புனர்பூச நட்சத்திர அன்பர்கள் இந்த காலகட்டத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் சொத்து நிலவரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்தால் நல்லபடியாக அதை செய்து முடிக்க முடியும். அதேபோல் நிதி ஆதாரத்தை அதிகமாக பெருக்கிக் கொள்ள முடியும் பல திறமைகள் கொண்ட மிதுன ராசி புனர்பூச அன்பர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் பணம் சேர்ப்பதற்கு வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்புகளை சனி உருவாக்கித் தருவார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)