Chennai News: கம்பளைண்ட் கொடுத்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரூமுக்கு அழைத்த காவலர்.. சென்னையில் அதிர்ச்சி.!
மாயமான இருசக்கர வாகனத்தை கண்டறிந்த காவலர் ஒரு முத்தமாவது கொடுத்துவிட்டு போயேன் என பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மே 07, ஆவடி (Chennai News in Tamil): சென்னையில் உள்ள ஆவடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணின் இருசக்கர வாகனம் சில மாதங்களுக்கு முன்பு திருடுபோனது. இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்திருந்த நிலையில், சமீபத்தில் பெண்ணுக்கு தொடர்பு கொண்ட காவலர்கள் வாகனத்தை கண்டறிந்துவிட்டதாகவும், ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு பின் வாகனத்தை எடுத்துசெல்லுமாறும் கூறியுள்ளனர். அங்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டபோது பெண்ணிடம் ரூ.15000 வரை லஞ்சம் கேட்கப்பட்டு, பின் பேரம் பேசி ரூ.5 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, காவலர் சசி என்பவர் பெண்ணிடம் அநாகரீமாக பேச தொடங்கியுள்ளார். அதாவது, உன்னை முதலில் பார்த்ததும் எனக்கு ஆசை வந்துவிட்டது. நான் உன் வீட்டுக்கு வரவா? நீ என்னுடன் வருகிறாயா? உனக்காகத்தான் கஷ்டப்பட்டு இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்தேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் செய்வதறியாது திகைத்துள்ளார். மேலும், எனக்கு அந்த விஷயத்தில் விருப்பம் இல்லை. நீங்கள் கேட்ட பணத்தை கொடுக்கிறேன். வாகனத்தை கண்டுபிடித்து கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார். 'வெற்றிதான் எங்கள் பயிற்சியே.. எங்கும் எப்போதும் தயார்' - எதிரிகளுக்கு பிரகடனம் செய்த இந்திய இராணுவம்..!
காவலரின் அநாகரீக செயல்:
பெண்ணிடம் பணம் இல்லாததால் கையில் இருந்த ரூ.2000 பணத்தை கொடுத்துவிட்டு, எஞ்சிய தொகை ரூ.3 ஆயிரத்தை மறுநாள் ஒப்படைப்பதாக கூறியுள்ளார். பணத்தை இங்கு வைத்து வாங்கமாட்டேன் என கூறிய காவலர் சசி, வேறொரு இடத்தில் வந்து வாங்குகிறேன் என பெண்ணை விடுதிக்கு அழைத்து வந்து அறையெடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளார். பெண்ணை பின்தொடர்ந்தவாறு வந்த பெண்ணின் சகோதரர் அனைத்தையும் கவனித்துக்கொண்டு காவலரை கையும் களவுமாக பிடித்து இருக்கிறார். அவரை அதட்டி விசாரிக்கும் காட்சிகளும், என்னை விட்டுவிடுங்க என காவலர் கதறுவதும் அதில் இடம்பெற்றுள்ளது. புகார் அளித்த பெண்ணை இவ்வுளவு துணிச்சலாக அவர் படுக்கைக்கு அழைத்திருந்தால், இதுவரை எத்தனை புகார்கள் அளித்த பெண்ணிடம் காவலர் அத்துமீறி நடந்திருப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, காவல் நிலையத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் சகோதரர் காவலரிடம் சண்டையிடும் காணொளி:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)