Heart Wrenching Video: 6 வயது சிறுமியை கடித்து இழுத்துச் சென்ற நாய்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!
வீட்டின் வாசலில் இருந்த சிறுமியை தெரு நாய்கள் இரண்டு கடித்து குதறிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜனவரி 31, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Dog Attacked a Child), ராஜேந்திரன் நகர், கோல்டன் ஹெய்ட் காலனி பகுதியில் 6 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமி இன்று காலை சுமார் 06:57 மணிக்கு தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, சிறுமியை அவ்வழியாக சென்ற 2 தெருநாய்கள் கவனித்தன. சிறுமி தனது வீட்டின் வாசல் பகுதியில் இருந்தார். அப்போது, திடீரென மூர்க்கமான நாயில் ஒன்று, சிறுமியை சென்று தாக்கியது. பின் அதனுடன் வந்த மற்றொரு நாயும் சிறுமியை தாக்கியது. President Speech on Budget 2025: "இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜெட்" - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடர் உரை.!
பதறவைக்கும் காட்சிகள்:
சிறுமி நாயை பதிலுக்கு தாக்கி தப்பிக்க முயற்சித்தார். ஆனால், நாய்கள் தொடர்ந்து தாக்கியது. ஒருகட்டத்தில் சிறுமி கீழே விழுந்துவிட, அவரை நாய் காலைப்பிடித்து தரதரவென இழுத்துச் சென்றது. இதனால் சிறுமி அலறிய நிலையில், அவரை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சியும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பதைபதைப்பை உண்டாக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் மக்கள் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை வைக்கின்றனர்.
சிறுமியை கவ்வியபடி இழுத்துச்செல்லும் தெருநாய்:
மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன...