Crocodile Visits Village: என்ன பங்காளிகளா சௌக்கியமா? கிராமத்தில் புகுந்து ரைடு விட்ட முதலையார்.!

முதலை ஒன்று சாவகாசமாக கிராமத்திற்குள் புகுந்து தெருக்கள் வழியே சுற்றித்திரிந்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

Bijnor Crocodile Visit (Photo Credit: @gharkekalesh X)

ஆகஸ்ட் 08, பீஜினோர் (Uttar Pradesh News): தென்மேற்குப்பருவமழை காரணமாக பெரும்பாலான வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒருசில இடங்களில் முதலைகள் கிராமங்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்துவிடுகின்றன. இதனை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பீஜினோர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. கிராமத்தின் சாலை வழியே மக்களை கண்டு அஞ்சாது முதலை சென்றது, வடிவேல் காமெடி பாணியில் "என்ன பங்காளி சௌக்கியமா?" என்ற கேள்வியை எழுப்பி சென்றதுபோல அமைந்துள்ளது. Lithium-Ion Battery Explosion: செல்போனை கடித்து விளையாடிய நாய்; திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு..! பகீர் வீடியோ உள்ளே..! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement