Biryani Delivery: வெஜ் பிரியாணி கேட்ட சைவ பிரியருக்கு அதிர்ச்சி.. கண்ணீருடன் வெதும்பிய பெண்.!
சைவ பிரியரான பெண் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்தபோது, அவருக்கு சிக்கன் பிரியாணி விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஏப்ரல் 07, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் இளம்பெண் சாயா சர்மா. இவர் சைவ உணவு மட்டும் சாப்பிடும் நபர் ஆவார். நேற்று இரவு நேரத்தில் சாப்பிட வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவும் டெலிவரி செய்யப்பட்ட பின்னர் அவர் பசியால் இரண்டு வாய் எடுத்து சாப்பிட்ட நிலையில், அதில் சிக்கன் இருந்துள்ளது. இதனால் சைவ பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக பெண் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. உணவகத்தின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. Madras Eye: வேகமெடுக்குது மெட்ராஸ் ஐ.. சென்னைவாசிகளே உஷார்.!
பெண் தனது ஆதங்கத்தை தெரிவிக்கும் காணொளி:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)