Dogs Attacked Child: சிறுவனை துரத்தி விரட்டிக்கடித்த நாய்கள்.. பகீர் சி.சி.டி.வி காட்சிகள்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஏப்ரல் 13, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் (Nagpur, Maharashtra), வாதோடா அன்மோல் நகர் பகுதியில் சிறுவன் வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த தெருநாய்கள் சிறுவனை (Child byte by Street Dogs) பார்த்து குறைக்கவே, அவன் அங்கிருந்து செல்ல முயற்சித்தான். ஆனால், சிறுவனை விடாத தெருநாய்கள், அவனை கடித்து குதற தொடங்கியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெண்மணி ஒருவர், நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர். முதற்கட்ட தகவலின்பேரில் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. Construction Issue: தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிவிட்ட பணியாளர்கள்.. அல்டரா லெவல் டெக்னீக்கில் செஞ்சி கட்டுமான தொழிலாளர்கள்.!