வானிலை: 17 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை வெளுத்துகட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மதியம் 1 மணிவரை 4 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.
மே 26, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம் 1 மணிவரையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gold Silver Price: தங்கம் விலை இன்று குறைவு.. விவரம் உள்ளே.!
1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)