Peacocks Death Mystery: மர்மமான முறையில் காட்டுப்புறத்தில் மயில்கள் உயிரிழப்பு.. மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்.!!
காட்டுப்பகுதியில் மர்மமாக மயில்கள் உயிரிழந்து கிடைக்க, அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? ஒரே இடத்தில் எப்படி மயில்கள் அனைத்தும் இறந்து கிடந்தன என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
மார்ச் 07, பூலாங்குளம் (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள பூலாங்குளம் (Poolankulam, Madurai) கிராமத்தின் காட்டுப்பகுதியில் மயில்கள் இறந்து (Peacocks) கிடப்பதாக மதுரை வனச்சரக (Madurai Forest Department) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மயில்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மயில்கள் விஷம் கலந்த உணவு ஏதேனும் சாப்பிட்டு உயிரிழந்ததா? அல்லது வேறு இடத்தில் உயிரிழந்த மயில்கள் கொண்டு வந்து அங்கு போடப்பட்டனவா? என விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் மயில்களின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். Marandahalli Elephant Died: சட்டவிரோத மின்வேலியால் கொடூரம்.. கோடைக்கு புலம்பெயர்ந்த யானைகள் மின்சாரத்தில் சிக்கி பரிதாப பலி.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)