வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.. 23 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.!
இரவு 7 மணிவரை 23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.
ஜூன் 02, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் இன்று (ஜூன் 02) இரவு 7:00 மணி வரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Gold Silver Price: 72,000ஐ கடந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.1120 உயர்வு.. உச்சக்கட்டத்தில் இன்றைய தங்கம் விலை..!
வானிலை ஆய்வு மைய அறிவிப்பு :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)