MK Stalin: திருக்குறளின் முதல் அச்சுப்புத்தகத்தை பரிசாகப் பெற்ற தமிழ்நாடு முதல்வர்; மனம் நெகிழ்ந்து வலைப்பதிவு.!

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு, திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட முதல்வர், அறிஞர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

Balakrishnan IAS With TN CM MK Stalin (Photo Credit: @TNDIPRNews X)

பிப்ரவரி 27, சென்னை (Chennai News): உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக அறிஞர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிஞர் பாலகிருஷ்ணன் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும், இதுதொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி IAS ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார்! அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்!" என தெரிவித்துள்ளார். 50,000 பேருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு.. ரூ.5,000 கோடி செலவில் புதிய தொழிற்சாலை.. தமிழக அரசு அதிரடி.‌.! 

முதல்வர் பரிசுக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்த வலைப்பதிவு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now