கலியுகத்தில் இப்படி ஒரு நேர்மை... சிறுமிகளுக்கு குவியும் பாராட்டு..!
திருத்தணி முருகன் கோவிலில் கண்டெடுத்த 1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை, 2 சிறுமிகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
ஏப்ரல் 08, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி (Tiruttani) முருகன் கோவிலில் சாமி கும்பிட, பக்தர்கள் ஏராளமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், சென்னை சேர்ந்த பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, அவரது 1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை தவறவிட்டார். இதனையடுத்து, கார் பார்க்கிங்கில் அந்த நகை கிடந்துள்ளது. இதனை கண்டெடுத்த சிறுமிகள் ரேணுகா, பவித்ரா ஆகியோர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு, நகை உரிமையாளரிடம் பத்திரமாக கொடுக்கப்பட்டது. இந்த ஏழ்மையான சூழலிலும், கண்டெடுத்த நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமிகளை, காவல்துறையினர் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். Madurai Shocker: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி உடல் அழுகிய நிலையில் மீட்பு.. நடந்தது என்ன..?
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)