2nd Massive Turkey Earthquake: துருக்கியில் மீண்டும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு.!

ஆயிரத்திற்கும் அதிகமானோரை காலையில் இருந்து பலிவாங்கிய துருக்கி நிலநடுக்கம், மாலையில் மீண்டும் மற்றொரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

2nd Massive Earthquake at Turkey

பிப்ரவரி 06, துருக்கி: இன்று அதிகாலை துருக்கி, சிரியா, லெபனான் (Turkey, Syria, Lebanon) போன்ற நாடுகளில் ரிக்டரில் 7.8 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், துருக்கியில் கோர (Turkey Earthquake) அழிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்துள்ளது. மக்கள் கொத்து கொத்தாக சடலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் தெற்கு துருக்கி (2nd Massive Earthquake on Turkey) பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது. Turkey Earthquake: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு செல்கிறது இந்திய மீட்பு குழு – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement