Harmanpreet Kaur: விதியை மீறிய மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணியின் கேப்டனுக்கு 10% அபராதம் - WPL நிர்வாகம் அறிவிப்பு.!
மகளிர் டி20 பிரிவில் களமிறங்கியுள்ள மும்பை அணியின் பெண்கள் அணி தலைவர் ஹர்மன்பிரீத், விதியை மீறி செயல்பட்ட காரணத்தால் அபராதத்தை எதிர்கொண்டார்.
மார்ச் 07, லக்னோ (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's WPL 2025) போட்டியில், நேற்று வரை 16 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்தது. நேற்று உபி வாரியர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (UP Warriorz Vs Mumbai Indians Women WPL 2025) அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் தோற்ற உபி அணி, முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு உபி அணி 150 ரன்கள் எடுத்திருந்தது. டாஸ் வென்று இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்த மும்பை அணி 18.3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி அடைந்தது. India Vs New Zealand Cricket: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி: இந்தியா Vs நியூசிலாந்து.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
10% அபராதம் விதிப்பு:
இந்நிலையில், போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத், நடுவர் கொடுத்த முடிவுக்கு எதிராக வாக்குவாதம் செய்தார். இதுதொடர்பாக எதிரணியின் வீரருடனும் அவர் கடிந்துகொண்டார். இதனால் போட்டியின் நடுவே கவுர் டபிள்யு.பி.எல் விதிமுறை 2.8 ஐ மீறியதாகவும், அதனால் அவருக்கு போட்டித்தொகையில் 10% அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்டான வாக்குவாதத்தில், கவர் விதியை மீறி நடந்துகொண்டதாக அபராதம் விதிப்பு:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)