Chengalpattu Women Suicide: முன்னாள் காதலனை தேடிச்சென்ற இளம்பெண் தற்கொலை; விசிக பிரமுகர் மீது பரபரப்பு புகார்..!
அன்பான கணவன், அழகான குழந்தை, பாசத்திற்கு பெற்றோர் என சுற்றும் உறவுகள் நல்லநிலையில் இருக்க, முன்னாள் காதலரான விசிக பிரமுகரை நம்பி தனிக்குடித்தனம் நடத்த சென்ற பெண்மணி இறுதியில் சடலமாக பெற்றோர் வீடு திரும்பினார்.

ஆகஸ்ட் 28, பொத்தேரி (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரியை (Potheri, Chengalpattu) சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரின் மகள் பவித்ரா. பவித்ரா தனது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணவரின் வீட்டில் இருந்து வெளியேறி, தைலாவரம் பகுதியில் இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடியேறி இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "தனது மகள் பவித்ராவை, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் மனதை மாற்றி அழைத்து சென்று, நகை & பணமெல்லாம் வாங்கிகொண்டவர், ரூ.10 இலட்சம் வரையில் பணம் பணம் கேட்டு தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டி இருக்கிறார்.
எனது மகள் எனது தலையில் அடித்து ஒரு வாரத்தில் குழந்தைக்காக தன்னுடன் வந்துவிடுவதாக தெரிவித்த நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என " என தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், பொத்தேரியை சேர்ந்த விசிக பிரமுகர் தமிழ்வாணனை கைது செய்து விசாரணை நடத்தினர். Tirunelveli Crime: நெல்லையில் தலைதூக்கும் நாட்டு வெடிகுண்டு வகையறாக்கள்; சிக்கும் சில்வண்டுகள்.. விவசாய நிலங்களில் திடீர் வெடிச்சத்தம்., பதற்றம்.!
விசாரணையில், திருமணத்திற்கு முன்பே விசிக பிரமுகர் தமிழ்வாணனை காதலித்து வந்த பவித்ரா, ஒருகட்டத்தில் காதலனின் செயல்பாடுகள் பிடிக்காமல் விலகி இருக்கிறார். இதனையடுத்து, கோவிந்தராஜ் தனது உறவினருக்கு மகளை திருமணம் செய்தும் அளித்துள்ளார். இருவரும் அன்போடு ஐந்தாண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், அதற்கு சாட்சியாக ஐந்து வயது பெண் குழந்தையும் இருக்கிறது.
இதற்கிடையே, சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னாள் காதலியிடம் மீண்டும் நட்பை ஏற்படுத்திய தமிழ்வாணன், பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியாமல் பவித்ராவை பல இடங்களுக்கு அழைத்து சென்று இருக்கிறார். இந்த விவகாரம் பவித்ராவின் கணவருக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்து இருக்கிறார். திடீர் காதல் ஜோடி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
அப்போதுதான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பவித்ரா தனது கணவரின் வீட்டில் இருந்து தனது நகை, பணம், குழந்தை ஆகியவற்றுடன் தமிழ்வாணனை தேடி சென்றுள்ளார். அவரும் தனியே வீடு எடுத்துக்கொடுத்து பவித்ராவை கவனித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தந்தையை சந்தித்த பவித்ரா, தமிழ்வாணனை விட்டு பிரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தான் அவரின் மர்ம மரணமும் நடந்துள்ளது. பவித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பவித்ரா தற்கொலை குறிப்புக்கள் ஏதும் பதிவு செய்யவில்லை என்பதால், நிபந்தனையோடு விசிக பிரமுகர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)