வானிலை: அடிதூள்.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் அலர்ட்.. இன்று முதல் வெளுக்கப்போகுது.. முழு விபரம் உள்ளே.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் தமிழ்நாடு & புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Rains (Photo Credit: @RNivascar / @THChennai X)

டிசம்பர் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்‌திய பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரண்டு தினங்களில்‌, மேலும்‌ வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில்‌, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்க நகரக்கூடும்‌. இதனால் டிச.17 முதல் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்தது.

இன்றைய வானிலை (Today Weather):

அதன்படி, இன்று 17-12-2024 வட கடலோர தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, இதர தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ மற்றும்‌ புதுவையில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது. Ilaiyaraaja News: “எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை” - இளையராஜா பேட்டி.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை 18-12-2024 அன்று வட கடலோர தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, இதர தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, காஞ்‌சிபுரம்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ மற்றும்‌ புதுவையில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, வேலூர்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை (Chennai Weather Today) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, மிதமான - கனமழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌. Margazhi Month 2024: மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்‌:

17-12-2024 இன்று தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதி, நாளை 18-12-2024 மற்றும்‌ நாளை மறுநாள் 19-12-2024 தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேநேரத்தில், இன்று (17-12-2024) தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும்‌ தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ இன்றும், நாளையும் (18-12-2024) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement