பணத்துக்காக பாட்டியை போட்டுத்தள்ளிய பேரன்.. அதிர்ச்சி சம்பவம்..!
கோவையில் பணத்துக்காக பாட்டியை பேரனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 05, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், சுந்தராபுரம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மூதாட்டி மனோன்மணி (வயது 80). இவரது மகன் முருகன் என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது மரணத்துக்கான இழப்பீடுத் தொகை, கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது வாரிசுதாரர்களுக்கு வந்தது. அந்தவகையில், முருகனின் தாயார் மனோன்மணிக்கும் பணம் கொடுக்கப்பட்டது. Salem News: தடுப்புச்சுவரில் மோதி கோர விபத்து.. கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே பலி..!
கழுத்தறுத்து கொலை:
இந்நிலையில், இழப்பீடு பணத்தை தனக்கு கொடுக்குமாறு முருகன் மகன் சிவக்குமார் (வயது 25), தனது பாட்டியிடம் கேட்டுள்ளார். ஆனால், பாட்டி பணத்தை தர மறுத்தார். இந்நிலையில், இன்று (மே 0 5) மதியம் பாட்டியை தேடி வந்த பேரன் சிவக்குமார், மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணத்தை தர மறுத்த பாட்டியை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தறுத்து கொடூரமாக (Murder) கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
போலீஸ் வலைவீச்சு:
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிவகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)