Mother Died: அருவியில் நீரில் தத்தளித்த மகனை மீட்டு உயிரைவிட்ட தாய்: கள்ளக்குறிச்சியில் சோகம்.!

தாய், 2 மகன்கள், தோழி என நீர்வீழ்ச்சியில் விடுமுறையை கொண்டாட குளிக்க சென்றவர்களில், மகனை காப்பாற்றிய தாய் அடுத்த நொடியே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Died Victim | Death File Pic (Photo Credit: Source Pixabay)

செப்டம்பர் 29, வடபொன்பரப்பி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி, லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரின் மனுவை மாணிக்கவள்ளி (வயது 30). தம்பதிகளுக்கு கிஷோர் (வயது 13), கிரண் குமார் (வயது 12) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இவர்களில் கிஷோர் அங்குள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பும், கிரண் குமார் ஆறாம் வகுப்பும் பயின்று வருகிறார். சமீபத்தில் கல்வராயன் மலையில் பெய்த மழை காரணமாக, அடிவாரத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருகிறது.

இதனால் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள் பலரும் அருவிகளில் குளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறையையொட்டி மாணிக்கவள்ளி தனது மகன்களோடு குளிக்க நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். Black Pepper benefits: அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு அற்புதம்: கருப்பு மிளகின் பலன்கள் அறிவோம்.!

அப்போது, தனது தோழியான பாக்யராஜ் என்பவரின் மனைவி ராதிகா (வயது 29) என்பவரையும் உடன் அழைத்து சென்றுள்ளார். நீர்வீழ்ச்சியில் இவர்கள் நால்வரும் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் கிரண் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சலும் தெரியாமல் தத்தளித்து இருக்கிறார்.

மகனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மாணிக்கவள்ளி, அவரை மீட்டு ராதிகாவிடம் கொடுத்துள்ளார். அடுத்த நொடியே திடீரென ஆட்பறித்த நீரின் பிடியில் சிக்கிய மாணிக்கவள்ளி, ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஒருமணிநேர போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை அளித்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement