Viral News: கிராம மக்களின் 10 ஆண்டு ஆசை.. விமானத்தில் கோவா பறந்த மக்கள்..!

தட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் விமானத்தில் பறந்து தங்களது 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

Viral News (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 22, நெல்லை (Nellai): நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள தாட்டான்பட்டி (Thattanpatti) கிராமத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். வாலிபர்கள் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் சேவை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதற்காக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர். CEAT Launches Sportrad, Crossrad Tyres: டூ-வீலர்களுக்கான புதிய சியட் டயர்... விற்பனைக்கு அறிமுகம்..!

அதன்படி சுமார் 10 ஆண்டுகள் சேமித்து, கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement