Minor Girl Killed: 17 வயது சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கி, சுடுகாட்டில் கொன்று புதைத்த காதலன்; நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு வாக்குமூலம்.!
பெற்றோரை எதிர்த்து காதலனின் ஆசையே முக்கியம் என ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் ஒன்று சேர்ந்த 17 வயது சிறுமியை, காம இச்சைக்கு பயன்படுத்திய காதலன் இறுதியில் 3 மாத கர்ப்பிணி என்றும் பாராது பெண்ணை கொன்று புதைத்த பயங்கரம் நடந்துள்ளது.
மே 13, செஞ்சி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி (Gingee, Viluppuram), சாலவனூர் கிராமத்தில் 100 நாட்கள் வேலையில் மக்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சுடுகாடு அருகே பள்ளம் தொடுகையில், இளம்பெண்ணின் சடலம் கிடைத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் கவின்னா, கஞ்சனூர் காவல் துறையினர் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டனர்.
பின்னர் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விசாரணை தீவிரமாக நடைபெற்றது.
பிரேத பரிசோதனையில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்மணி 3 மாதமாக கர்ப்பமாக இருப்பது உறுதியானது. அவரின் வயதும் 17 முதல் 19 இருக்கலாம் என்பதும் உறுதியானது. இதனையடுத்து நடந்த தீவிர விசாரணையில், கொலையான பெண்மணி விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் கண்டமானடி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. Women Protest: பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார்; கண்டுகொள்ளாத கணவனால் தர்ணாவில் குதித்த இளம்பெண்..!
அவரை கொலை செய்தது விக்கிரவாண்டி, சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பவரின் மகன் அகிலன் (வயது 23) என்பது உறுதியானது. இவர் சென்னையில் இருப்பது உறுதியாகவே, அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அகிலன் பேண்ட் வாத்திய குழுவில் இசைக்கருவியை இசைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இக்கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டி காக்கனூர் கிராமம் ராஜாமணியின் மகன் சுரேஷ் குமாரும் (வயது 22) இருந்துள்ளார்.
இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பல பரபரப்பு தகவல் தெரியவந்தன. அகிலனின் உறவினர் வீடு கப்பூரில் இருந்துள்ளது. பிரியதர்ஷினியின் உறவினர் வீடும் அதே கிராமத்தில் இருந்துள்ளது. இருவரும் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்றபோது, பிரியதர்ஷினி - அகிலன் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த காதலுக்கு பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், அவ்வப்போது ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் காதல் ஜோடி உல்லாசமாகவும் இருந்துள்ளது. காதல் ஜோடியின் உல்லாச வாழ்க்கை தொடர்பான விபரம் பிரியதர்ஷினியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் மகளை கண்டித்துள்ளனர்.
இதனை கண்டுகொள்ளாத பிரியதர்ஷினி அகிலனுடன் பழகி வர, அதனால் அவர் 3 மாத கர்ப்பமாகியுள்ளார். இந்த தகவலை காதலனிடம் தெரிவித்து திருமணம் செய்துகொள்ள அகிலனை அறிவுறுத்தவே, அவர் சித்தேரிபட்டுக்கு வா திருமணம் செய்யலாம் என அழைத்து கொலை செய்து சுடுகாட்டில் உடலை புதைத்துள்ளார். இந்த கொலை காரணம் வெளியானதால் கண்டமானடி, சித்தேரிபட்டு கிராமம் பரபரப்பாகியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)