Virudhunagar Accident: ஓட்டுனரின் உறக்கத்தால் நடந்த சோகம்; சாலையோர பனைமரத்தில் மோதி 2 பெண்கள் பரிதாப பலி.!
குடும்ப சுற்றுலாவை முடித்துவிட்டு வரும் வழியில் ஓட்டுனரின் உறக்கத்தால் நொடியில் இன்ப சுற்றுலா 2 பெண்களுக்கு இறுதி சுற்றுலாவாகிப்போன சோகம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 14, சாத்தூர் (Virudhunagar News): ஓட்டுநராக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு உறக்கம் வருகிறது எனில், எவ்வித தயக்கமும் இன்றி உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதன் விளைவை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கெங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
இவர்கள் பயணித்த TN 95 C 3988 பதிவெண் கொண்ட கார் சாத்தூர் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரான சரவணன் உறக்கலக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, வாகனமும் அதிவேகத்தில் இயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருநொடி ஓட்டுநர் கண் அயர்ந்த காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பனைமரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். Trending Video: ஜெட் வேகத்தில் பறந்த இருசக்கர வாகனம்; ஒருவர் பலி.. 2 பேர் உயிர் கவலைக்கிடம்.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!
சரவணன் சீட்பெல்ட் அணிந்திருந்த காரணத்தால் காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், தகவல் அறிந்து வந்த சாத்தூர் காவல் துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான 2 பெண்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிந்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)