Pan Card New Rule: பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.!
பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய அரசு சில முக்கிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
நவம்பர் 06, டெல்லி (Technology News): இந்தியாவில் பான் கார்டு (PAN card) மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. வருமானவரித் தாக்கல் செய்வதற்கு, பேங்க் பரிவர்த்தனைக்கு என அனைத்திற்கும் தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் இதுவும் ஒன்று. பான் கார்டு வருமானவரித்துறையினரால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். இதனை பத்திரமாக வைத்திருப்பது முக்கியம். இந்நிலையில் பான் கார்டு குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியேற்றுள்ளது. Electric Kettle Maintenance: மின்சார கிட்டில் நீண்ட நாட்களுக்கு வர வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க.!
பான் கார்டு விதிமுறைகள்:
- இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையமான ஐ4சி, இதை தொடர்பாக நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவுள்ளது. அதன்படி பான் கார்டு விபரங்களை உரிய அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
- பான் கார்டு விபரங்களைக் கொண்டு தனி நபர்களின் தகவல்களை பெறும் நிறுவனங்கள் அவர்களின் சிபில் கிரெடிட் ஸ்கோரை அறிந்து அதற்கு ஏற்ப அவர்களை அணுகுகின்றனர்.
- இது தனி தகவல் விதிமீறலில் வராவிட்டாலும் வருமான வரித்துறையின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவையை அதிகாரம் என்று அனுமதி பெறாமலும் தொடர்பு கொள்வதால் இதற்கு தற்போது அரசு தடை நடவடிக்கை எடுத்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)