Coromandel Express: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் தடம்புரண்டு விபத்து; உயிரிழப்பு அபாயம், 50 பேர் படுகாயம் என தகவல்.!

வனப்பகுதியில் சரக்கு இரயில் மீது பயணிகள் அதிவிரைவு இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில், அதிவிரைவு இரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Coromandel Express Train Accident visuals (Photo Credit Twitter)

ஜூன் 02, புவனேஸ்வர் (Coromandel Express Accident): சென்னையில் இருந்து மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா வரை செல்லும் கோரமண்டல் அதிவிரைவு இரயில் சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களை இணைத்து பயணம் செய்கிறது.

இந்த இரயில் 1,659 கி.மீ தூரத்தை 25:30 மணிநேரம் பயணம் செய்து இலக்கை அடைகிறது. இன்று கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் அதிவிரைவு இரயில், புவனேஸ்வருக்கு 20 கி.மீ தொலைவில் விபத்திற்குள்ளானது. சரக்கு இரயில் மீது மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.

விபத்தில் அதிவிரைவு இரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்து வனப்பகுதியில் நடந்துள்ளாதால், மீட்பு படையினர் விரைந்து வந்து தொடர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 50 பேர் விபத்தில் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர அழைப்புக்கு: பாலஷோர் கட்டுப்பாட்டு மையம் 06782 262286

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement