Women Killed: 30 வயது லெஸ்பியன் தோழியை கழுத்தறுத்து கொன்ற 24 வயது இளம்பெண்; ஊருக்கு உண்மை அம்பலமானதால் பயங்கரம்.!
லெஸ்பியன் தோழியை நம்பி ஆணாக மாற சென்றபெண்மணி கழுத்தறுத்து கொல்லப்பட்ட பயங்கரத்தை பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூன் 21, ஷாஜகான்பூர் (UttarPradesh News): ஓரினசேர்கையில் தன்னுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை, அவரின் தோழி தாயுடன் சேர்ந்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர், ஆர்.சி மிசின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்மணி பிரியா (வயது 30). அங்குள்ள புவயன் பகுதியை சேர்ந்த பெண்மணி பிரீத்தி (வயது 24). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் தன்பாலின ஈர்ப்பாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் ஓரினசேர்க்கை கொண்ட நபர்களாக பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில், இவர்களின் தன்பாலின ஈர்ப்பு தொடர்பான விவகாரம் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் பிரீத்திக்கு திருமணம் தள்ளிப்போயுள்ளதாக தெரியவருகிறது.
தனது திருமணம் தள்ளிபோவதற்கு பிரியாவே காரணம் என்று எண்ணிய பிரீத்தி, அவரை தனது தாயார் ஊர்மிளாவுடன் சேர்த்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி இருக்கிறார். இவர்கள் அப்பகுதியை சேர்ந்த ராம்விலாஸ் என்ற மந்திரவாதியை நேரில் சந்தித்து இருக்கின்றனர். அவரிடம் தகவலை கூறாமல் பெண்ணை கொலை செய்ய ரூ.1.5 இலட்சம் பணம் தருகிறோம் என தெரிவித்துள்ளனர். Stray Dog: 9 வயது பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.. பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்.!
இதற்கு ராம்விலாசும் ஒப்புக்கொள்ள, பிரீத்தி தனது காதலியான பிரியாவிடம் நீ ஆணாக மாறினால், நாம் திருமணம் செய்து வாழலாம் என தெரிவித்துள்ளார். அதற்கு பிரியவும் ஒப்புக்கொண்ட நிலையில், மந்திரவாதி மந்திரம் சொல்லியே உன்னை ஆணாக மாற்றிவிடுவார் என ஆசையாக கூறியுள்ளார்.
இவர்களின் நயவஞ்சக எண்ணம் தெரியாத பிரியவும் அப்பாவியாக ஒப்புக்கொள்ள, அங்குள்ள ஆற்றுப்பகுதிக்கு அழைத்து சென்று பிரியாவை மந்திரவாதி கழுத்தை அறுத்து, சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளான். கடந்த ஏப்ரலில் பிரியா கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரியா மாயமானது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து அனைத்தும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய பிரீத்தி, அவரின் தாயார் ஊர்மிளா, மந்திரவாதி ராம்விலாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லெஸ்பியன் தோழியை நம்பி ஆணாக மாற சென்றபெண்மணி கழுத்தறுத்து கொல்லப்பட்ட பயங்கரம் அதிர்வலைகளை பதிவு செய்துள்ளன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)