Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
2025 ஆண்டு மார்ச் 29 அன்று நடைபெற உள்ளது சனி பெயர்ச்சி (Sani peyarchi). பொதுவாக சனிப் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் ரிஷப ராசி பலன்கள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
பிப்ரவரி 05, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் இருக்க ரிஷப ராசியில் கார்த்திகை 2 ம் பாதம், கார்த்திகை 3 ம் பாதம் கார்த்திகை 4 ம் பாதம், ரோஹிணி நட்சத்திரம் மற்றும் மிருகஷீரிஷம் முதல் இரண்டு பாதங்கள் இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்கள் (Rishabam Sani Peyarchi Palan 2025):
ரிஷப ராசியில் கார்த்திகை 2 ம் பாதம், கார்த்திகை 3 ம் பாதம், கார்த்திகை 4 ம் பாதம், இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பலமான குழப்ப எண்ணம் தோன்றும் . வேலை பார்க்கும் இடத்தில் அல்லது வியாபாரத்தில் மிக மிக முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கும். மனதில் சஞ்சலம் அலை மோதும் . பலரிடம் யோசனை கேட்க தேவை இருக்கும். பணத் தட்டுப்பாடு இருக்கும். நிதானமே நல்ல துணை. பல் தொடர்பான அல்லது வாய் தொடர்பான உபாதைகள் அடிக்கடி வரும். ஆனால் பாதகமில்லாத வகையில் அவை சரியாகும். பழைய உறவுகள் புதுப்பிக்கப்படும். முன்பு தவறாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வருந்துவார்கள். மன்னிக்கும் வாய்ப்பு கிடைக்கும் காலம். நட்புகளில் இருந்த / உறவுகளில் இருந்த கருத்து மாற்றங்கள் வேறுபாடுகள் குறையும். சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது கிடைக்கும் பல நல்ல விஷயங்கள் பெரிய பலமாக இருக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலகட்டம் மனதில் தைரியமும் உற்சாகமும் இருக்கும். ஆனால் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய அளவுக்கு உத்வேகம் இருக்காது காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். ஆனால் அவற்றை நடவடிக்கையாக செய்வதற்கு பல தயக்கங்கள் இருக்கும் காலகட்டமாக உத்திரட்டாதி சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு மனக்குழப்பம் இருக்கும். வீடு, மனை , வாகனம் அமையும் காலமாக அமையும். சுப செலவுகள் அமையும் இந்த அமைப்பும் பல மன தயக்கங்களுக்குப் பிறகு கைகூடும். திருமணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் பல குழப்பங்களுக்கிடையில் தான் முடிவு எடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். சனி ரேவதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் பயணம் அவசியமாக ஏற்படும் ஆனால் விபத்து நடக்க வாய்ப்பு உண்டு . பிறரின் பொறாமை , பகை ஏற்படும் . ஆகவே வார்த்தைகளில் உரையாடலில் கவனம் மான உரையாடல் கூட சண்டையாக மாறிவிடும் காலகட்டம் இது ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல செய்தி வரும். அது பெரும்பாலும் சுப காரியம் தொடங்கும் விஷயமாக இருக்கும். சிலருக்கு அயல் நாட்டு வேலை வாய்ப்பு அல்லது அயல் நாட்டு வியாபாரத் தொடர்பு கிடைத்து செல்வம் கிடைக்கும். அது திடீர் அதிர்ஷ்டம் போல அமையும் . புதிய முயற்சிகளில் நல்ல துணை & ஆலோசனை கிடைக்கும். ஆகவே அதற்கு ஏற்ப திட்டமிடலாம் , இந்த மாதிரி முயற்சிகளை வேகமாக முடிக்க வேண்டும் . கால தாமதம் செய்யக் கூடாது. சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் இந்த நட்சத்திர பெண் ஜாதகர்கள் நஷ்டத்தினை சந்திப்பார்கள் நெருக்கமான உறவுகளுக்கு உடல் நலத்தில் வரும் தொந்தரவினால் இவர்கள் சங்கடம் அடைவார்கள். Javvarisi Payasam Recipe: அட்டகாசமான சுவையில் ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
இதன் காரணமாக அதிக பொருள் செலவும் விரயமும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிள்ளைகள் உடன் உறவு பாதிக்கும் . பிள்ளைகள் காதல் அவர்கள் திருமணம் தொடர்பான முடிவு எடுக்கும் காலகட்டம் ஆனால் இவற்றில் அதிகம் சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும் கண் பார்வை தொடர்பான சிகிச்சை எடுக்கும்படி ஆகும். சனி ரேவதி சாரத்தில் இருக்கும் போது சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை இருந்த பல சிக்கல்கள் விலகும ஆனால் அவை சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் நிவாரணம் . காரணம் சனி மேஷத்தில் வரும் போது துன்பம் அதிகமாகும். பொதுவில் இந்த சனி பெயர்ச்சி ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதாகமானது இல்லை.
ரிஷப ராசியில் மிருகஷீரிஷம் முதல் இரண்டு பாதங்கள் இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
சனி பூரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது அதிகம் சிரமம் . ஏற்கனவே தொடங்கி நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கும் பல நல்ல விஷயங்களில் முட்டுக்கட்டையை சனி உண்டாக்குவார் சிலருக்கு தாங்கள் ஆசையாக தொடங்கிய பல வேலைகளை கைவிடும் படி சங்கடமான சூழ்நிலைகளை சனி பூரட்டாதிசாரத்தில் இருக்கும்போது உருவாக்குவார். மன உறுதியுடன் எதிர்கொண்டால் மட்டுமே இந்த சங்கடத்தை எதிர்கொள்ள இயலும். பண விரயம் பணம் தட்டுப்பாடு போன்றவற்றை இந்த காலகட்டத்தில் சனி இடம் இருந்து எதிர்பார்க்கலாம். பொருள் விரயம் மட்டும்தான் இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலைமை இருக்கும் உடல் உபாதைகள் தவிரபெருமளவு ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் என்று சொல்லலாம். சனி பகவான் உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும்போது ரிஷப ராசி மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்கள் நல்ல காலத்தை அனுபவிப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். பல நல்ல முன்னேற்றங்கள் கண்கூடாக காணக் கிடைக்கும்.
இது தவிர வீட்டில் சுப காரியங்கள் கைகூடி வரும் பிள்ளைகளின் கல்வியில் அதிக உயர்வு எதிர்பார்க்கலாம் புத்திர பாக்கியம் அமையாமல் அதற்குண்டான முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதற்குரிய நல்ல செய்தி அவசியம் கிடைக்கப் பெறுவார்கள் சனி இந்த கருணையை அவர்களுக்கு அவசியம் செய்கிறார். உத்திரட்டாதி சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது ரிஷப ராசி மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்கள் செல்வாக்குள்ள உதவி பெறுவார்கள் பெரிய மனிதர்கள் தொடர்பு வியாபாரத்தில் முன்னேற்றம் இறை அவசியம் எதிர்பார்க்கலாம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் உதவியை தக்க வைத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் காலத்தில் பெரிய அளவு ஊன்றுகோலாக இந்த உதவிகள் அமையும் காரணம் சனியின் பார்வையால் தூண்டப்படும் நட்சத்திர தார பலன் இந்த அமைப்பை உருவாக்கித் தருகிறது எனவே இதை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)