Boy Dies of Dog Bite: நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!

என்.டி.ஆர். மாவட்டத்தில் 2 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Boy Dies (Photo Credit: Facebook)

நவம்பர் 12, என்டிஆர் (Andhra Pradesh News): ஆந்திரப் பிரதேசத்தின் என்.டி.ஆர். மாவட்டத்தில் பெனுகஞ்சிப்ரோலு மாடல் காலனியில் 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயரிழந்தான். சிறுவன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 10 வெறிநாய்கள் (Dog Bite) சிறுவனை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக சிறுவனை மீட்டு, நந்திகம அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய்த்தொற்று (Rabies Virus) தாக்கியுள்ளது தெரியவந்தது. Man Suffers Stroke After Massage: மக்களே உஷார்! ஹெட் மசாஜ் செய்தவர்க்கு பக்கவாதம்.. காரணம் என்ன?!

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஊராட்சி செயலர்களிடம் புகார் தெரிவித்தும் நாய்கள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என சிறுவனின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

வெறிநாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement