Viral Video: தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்த நபர்.. அடுத்து நடந்தது என்ன..?

பீகாரில் ஒரு நபர் தன்னை கடித்த பாம்பை கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Man Brought Russell's Viper Snake (Photo Credit: @kumarmanish9 X)

அக்டோபர் 17, பாகல்பூர் (Bihar News): பீகார் மாநிலம், பாகல்பூர் (Bhagalpur) மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு 48 வயது நபர் ஒருவர், நேற்று முன்தினம் (அக்டோபர் 15) மாலை அவரை கடித்த விரியன் பாம்பை (Russell's Viper) கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பதற்றம் நிலவியது. Car Accident: கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து.. 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!

மீராசக் கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ் மண்டல், கங்கை நதிக்கரையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விரியன் பாம்பு அவரது வலது கையை கடித்துள்ளது. உடனே அந்த பாம்பை (Snake) தைரியமாக பிடித்துக் கொண்டு தனது கழுத்தில் சுற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். இந்த வினோதமான சம்பவத்தை மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். வைரலான வீடியோவில், சிகிச்சை தாமதமானதால் அந்த நபர் பாம்பை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தரையில் படுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்ற நபர்:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement