6 Month Old baby Killed by Mother: உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரம்.. குழந்தையை கொன்று தாய் தற்கொலை.!
திருபுவனம் பகுதியை சேர்ந்த மீனா (34), உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்த 6 மாதமான கைக்குழந்தை வேதாஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
ஜூன் 02, திருப்புவனம் (Sivaganga News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், வலையப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 38). இவரின் மனைவி அழகு மீனா (வயது 34). இவர் கம்பிவேலி அமைக்கும் வேலை பார்க்கிறார். தம்பதிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் தற்போது 6 மாதமாகும் வேதாஸ்ரீ என்ற கைக்குழந்தை இருக்கிறது.
வருந்திய தாயின் மனம்:
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தொடர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த குழந்தை வேதா ஸ்ரீ, எப்போதும் அழுதுகொண்டு இருந்துள்ளது. மருத்துவர்களிடம் சென்று கைக்குழந்தைக்கு வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை. குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கொண்டு இருந்ததால், குழந்தையின் நிலையை எண்ணி தாய் மனம் வருந்தி இருக்கிறார். Dog Attack in Chennai: ஒரேநாளில் இருவேறு துயரங்கள்.. சிறார்களை கடித்து குதறிய நாய்கள்.. சென்னையில் அடுத்தடுத்து அதிர்ச்சி.!
பெட்ரோல் ஊற்றி கொலை & தற்கொலை:
இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் எழுந்துகொண்டு அழகுமீனா, 6 மாத கைக்குழந்தையுடன் கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தை மற்றும் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி இருக்கிறார். ஒருகட்டத்தில் தீயின் வீரியம் தாங்காமல் அலறிய அலறல் சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ந்துபோயினர்.
பரிதாபமாக பலியான உயிர்கள்:
பின்னர் விரைந்து சென்று தாய் - கைக்குழந்தையை மீட்டவர்கள், திருபுவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை வேதா ஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. அழகுமீனா மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். Norway Chess 2024: செஸ் போட்டியில் புதிய சரித்திர சாதனை; நம்பர் 1ஐ தொடர்ந்து நம்பர் 2-வையும் தோற்கடித்த பிரக்யானந்தா.!
திருப்புவனம் காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருப்புவனம் காவல் துறையினர், வேதா ஸ்ரீ மற்றும் அழகு மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த அதிர்ச்சி செயல் அப்பகுதியில் வசித்து வரும் மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)