Tiruvannamalai: தலைமைக்காவலரின் மகளுக்கே இப்படி ஒரு முடிவா?.. மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.!

திருவண்ணாமலையில் தலைமை காவலரின் மகள் மகாலட்சுமி மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை (Tiruvannamalai Dowry Case) செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

Tiruvannamalai Dowry Case (Photo Credit : Youtube / Pixabay)

ஆகஸ்ட் 26, திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் அருண். மதுரையை சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி (வயது 25). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த சில மாதங்களில் அருண் ஜெர்மனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். மகாலட்சுமியின் தந்தை தலைமை காவலராக மதுரையில் பணிபுரிந்து வருகிறார். Gold Rate Today: ரூ.75,000ஐ மீண்டும் நெருங்கும் தங்கம் விலை.. கிடுகிடு உயர்வு.!

வரதட்சணை கொடுமை :

இந்த நிலையில் கணவர் ஜெர்மனியில் வேலை செய்து வருவதால் தனது மாமியார் மலர்விழியுடன் மகாலட்சுமி வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே மாமியார் அவ்வப்போது மகாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்தவர் யாரிடம் கூறுவது என தெரியாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தனது பெற்றோரிடம் சூசகமாகவும் அவ்வப்போது வரதட்சணை கொடுமை தொடர்பாக தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெண் தற்கொலை :

சம்பவ தினத்தன்று மாமியாரின் எல்லை மீறிய வரதட்சணை கொடுமையால் மனம் உடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பேது பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து புகார் எழுந்ததால் வழக்கு பதிந்த போலீசார் பெண்மணியின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement