Bull Attacks School Girl: பள்ளிக்கு சென்ற சிறுமியை முட்டிதூக்கிய காளை: சாலையோரம் நின்று நொடியில் அதிர்ச்சி செயல்.!
எதிர்பாராத நேரத்தில் காளையின் கொம்புகளில் சிக்கி சிறுமி தூக்கி வீசப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக பச்சிளம் சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
டிசம்பர் 18, நொய்டா (Noida): தனது சுய சம்பாத்யத்திற்காக கால்நடைகளை வளர்க்கும் நபர்கள், அதனை சிலநேரம் மேய்ச்சலுக்காக வீதிகளில் திரியவிடுவதும், அவை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை தாக்குவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா தாத்ரி நகரில், தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்த சிறுமியை எருமை ஒன்று திடீரென தனது கொம்புகளால் முட்டித் தூக்கியது. நல்வாய்ப்பாக சிறுமி லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அலட்சியமாக செயல்படும் நபர்கள் மற்றும் அதனை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் வீதிகள் கால்நடைகளால் சூழப்பட்டு, சிலநேரம் அவை மனிதனின் உயிருக்கும் ஆபத்தாக அமைகின்றன என உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். UPI Transaction Data: 2022 - 2023ம் நிதியாண்டில் ரூ.139 இலட்சம் கோடிக்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை: 148% அதிகம்., மத்திய அரசு அறிவிப்பு.!