Trending Video: ஹெல்மெட்டில் சிசிடிவி.. உயிருக்கு பயந்து கேமராவுடன் திரியும் நபரின் வீடியோ வைரல்.!
இந்தூரில் பக்கத்து வீருக்காரர் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் தலைக்கவசத்தில் சிசிடிவி கேமரா பொருத்திக்கொண்டு நபர் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜூலை 15, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் வசித்து வரும் நபர் ராஜு. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்று அச்சப்பட்ட நபர், தனது தலைக்கவசத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தி வெளியே பொது இடங்களுக்கு செல்லும்போது பயன்படுத்தி வருகிறார். மேலும் தான் ஒரு வேலை கொல்லப்படும் பட்சத்தில் இந்த கேமரா பதிவான காட்சிகள் ஆதாரமாக இருக்கக்கூடும் என்றும், அதன் வாயிலாக எதிரிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைக்கவசத்தில் சிசிடிவி கேமராவுடன் அலையும் நபரின் வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)