Abhinav Arora: ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு.. 10 வயது சிறுவனின் அதிரடி செயல்.. காரணம் என்ன?!
நாட்டின் புகழ்பெற்ற 10 வயது யூடியூபர் பால் சாந்த் பாபா என்று அழைக்கப்படும் அபினவ் அரோரா, ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.
அக்டோபர் 29, மதுரா (Uttar Pradesh News): நாட்டின் புகழ்பெற்ற யூடியூபர் பால் சாந்த் பாபா என்று அழைக்கப்படும் அபினவ் அரோரா (Abhinav Arora). இவருக்கு வயது 10. அரோராவும் அவரது பெற்றோரும் ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மதுராவின் ஏசிஜேஎம் முதல் நீதிமன்றத்தில் சமூக ஊடகங்களில் ட்ரோலிங் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றைக் குற்றம் சாட்டி இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர். இதுகுறித்து அபினவ் கூறுகையில், "நான் இந்த வழக்கை தாக்கல் செய்ய விரும்பவில்லை, ஆனால் யூடியூபர்கள் என்னை கட்டாயப்படுத்தினர். ராமரும் கர்-துஷனைக் கொல்ல விரும்பவில்லை, ஆனால் அவரது குறும்பு காரணமாக, நீதிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. அது என் பெற்றோரையும் பாதிக்கிறது." என்றார். அபினவின் தாய் ஜோதி அரோரா, தனது மகன் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்படுவதாகவும், கொலை மிரட்டல் வருவதாகவும் கூறினார். மத நிகழ்ச்சி ஒன்றில் சுவாமி ராமபத்ராச்சாரியார் அருகில் நடனமாடிய வீடியோ வைரலானபோது இந்த சர்ச்சை எழுந்தது. இதற்குப் பிறகு, சில யூடியூபர்கள், அபினவ் அரோராவை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். Fireworks Explosion: கேரளா கோவிலில் பயங்கர வெடி விபத்து.. 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
யூடியூபர் பால் சாந்த் பாபா என்று அழைக்கப்படும் அபினவ் அரோரா:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)