TN Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு.!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வேலை, பள்ளிகளுக்கு செல்வோர் குடையுடன் பயணிப்பது சாலச்சிறந்தது.
ஜூலை 01, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம், நேற்றே தனது நாளைய வானிலை (Weather Update in Tamilnadu) அறிவிப்பில் கூறியிருந்தது. அதே வேளையில், மாநில அளவில் வெப்பம் என்பது இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி வரை உயரலாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ஜூலை 01ம் தேதியான இன்று காலை 10 மணி வரையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, நீலகிரி, கடலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Gas Cylinder Price July 2024: ஜூலை 2024 மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)